TamilNadu News

valparai Five students died வால்பாறை சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

Five people drown in Valparai river சோலையார் ஆற்றில் மூழ்கி 5 இளைஞர்கள் உயிரிழப்பு

வால்பாறையில் ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள்.பத்து பேர் கொண்ட குழு மாலை 4:30 மணியளவில் வால்பாறை வந்துள்ளார்கள் வால்பாறை அருகே சோலையாறு செல்லும் வழியில் நல்லகாத்து என்ற ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

வால்பாறை சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
வால்பாறை சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

இந்தக் குழுவைச் சேர்ந்த 5 பேர் குளிக்கச் சென்றனர். அவர்களில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்ற நால்வரும் அவரைக் காப்பாற்ற முற்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சோலையார் எஸ்டேட் ஆற்றில் குளித்த மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கோவை உக்கடத்தைச் சேர்ந்த சரத், அஜய், ரபேல், வினீத், தனுஷ் என அடையாளம் காணப்பட்டனர். 

நிகழ்வு குறித்த தெளிவு இன்னும் வரவில்லை. விபத்து நடந்ததையடுத்து, மற்ற குழுவினர்தான் உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுத்தனர். அப்பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து சோதனை நடத்தினர். தேடுதல் வேட்டையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய மாணவர்களை தேடினர். இந்த நிலையில், நீரில் மூழ்கிய 5 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Articles

Back to top button