TamilNadu News

tej cyclone இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை!!

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை

இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை!!

தென்மேற்கு அரபிக் கடலில் நேற்று இரவு ‘தேஜ்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த தேஜ் புயல் தென்மேற்கு அரபி கடலில், சகோத்ரா கருக்கு 330 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், சலாலா நகருக்கு 690 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் அல் கைடா நகருக்கு 720 கி.மீ. தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

tej cyclone
tej cyclone

இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமானமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக் கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button