TamilNadu News

puducherry diwali gift அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தீபாவளி பரிசு ரூ.490 வங்கி கணக்குகளில் வரவு! அதிரடி அறிவிப்பு

puducherry news புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.490 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதுமாக கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது.

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசி, சர்க்கரை வழங்குவதற்கு பதிலாக, அதற்கு ஈடான தொகை ரூ.490 தீபாவளி பரிசாக அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தீபாவளி இலவச தொகுப்பிற்கு பதிலாக ரொக்கமாக ரூ.490 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.490 தீபாவளி பரிசாக வழங்கப்படவுள்ளது.

10 கிலோ அரிசி, 2 கிலோ சர்ச்சகரைக்கு இணையாக ரூ.490 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 37 ஆயிரத்து 406 குடும்ப அட்டைகளுக்கு ரூ.16.53 கோடி வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்றது. சனி மற்றும் ஞாயிறு ஆகியவை வழக்கமான வார விடுமுறை நாட்கள்.இதனை கருத்தில் கொண்டு திங்கட்கிழமை வேலை நாட்களாக கொண்டால் தீபாவளி அன்று பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும்.இதனால், பண்டிகையை கொண்டாட முடியாது. எனவே புதுவையிலும் திங்கட்கிழமை 13.11.2023 அன்று அரசு விடுமுறை அளித்து புதுச்சேரி மக்கள் தீபாவளி பண்டிகையை முழுமையாக மகிழ்ச்சியுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button