TamilNadu News

heavy rain school holiday கனமழை காரணமாக இன்று 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Tamil Nadu School Holiday Today பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட்டுள்ளது விவரம் கீழே தரப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது மேலும் தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அஇன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்

கனமழை காரணமாக இன்று 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக இன்று 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

அதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனால் திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழை காரணமாக இன்று 14.11.2023 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

திருவாருர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

புதுச்சேரி காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

குறிப்பு:-

வேறு ஏதேனும் மாவட்டங்கள் விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும்

Related Articles

Back to top button