TamilNadu News

son and mother fell and died in to well செங்கல்பட்டு அருகே சோகம் கிணற்றில் துணி துவைக்கச் சென்ற போது தவறி விழுந்த மகன் – காப்பாற்ற முயன்ற தாயும் பலி

son and mother fell and died in to well செங்கல்பட்டு அருகே சோகம் கிணற்றில் துணி துவைக்கச் சென்ற போது தவறி விழுந்த மகன் – காப்பாற்ற முயன்ற தாயும் பலி

son and mother fell and died in to well
son and mother fell and died in to well

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விமல் ராணி (35). இவரது மகன் பிரவீன் (15) ஆகிய இருவரும் வயல்வெளி பகுதியில் உள்ள கிணற்றில் துணி துவைக்கச் சென்றுள்ளனர்.அப்போது கிணற்றின் அருகே அமர்ந்திருந்த பிரவீன் குமார் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்,

இதைக் கண்ட விமல் ராணி, மகன் பிரவீனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவருமே நீரில் மூழ்கி இறந்துள்ளார்கள் துணி துவைக்கச் சென்றவர்கள் நீண்ட நேரமாக காணவில்லை என அங்கு சென்று பார்த்தபோது  துணி மட்டும் அங்கு இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றினார்கள் அணைக்கட்டு போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Back to top button