IMPORTANT NEWS

mother killed baby in microwave 11மாத குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற தாய் 

பெற்ற தாயே குழந்தையை கொன்ற பரிதாபம் முழு விவரம்

mother killed baby in microwave 11மாத குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற தாய் 

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரில் வசித்து வருபவர் 26 வயதான மரிகா தாமஸ். ஒரு மாத பெண் குழந்தைக்கு தாயான இவர் அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானம் செய்ய தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவு சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையை வைத்துவிட்டார்.ஓவன் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் குழந்தையின் உடை , சுற்றி வைக்கப்பட்டிருந்த துணியும் சேர்ந்து வெப்பத்தால் கருகியது.

mother killed baby in microwave
mother killed baby in microwave

 

வீடு முழுவதும் எரிந்த புகை வாசனை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வீட்டின் மைக்கோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு பரிசோதித்ததில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயான மரிகா தாமசை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மரிகா தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து பெற்ற தாயே மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother killed baby in microwave

 

Related Articles

Back to top button