TamilNadu Newsviral videos

mother brutally beats her son குழந்தையை மிருகத்தனமாக தாக்கும் தாய் காரணம் என்ன தீயாய் பரவிய வீடியோ

குழந்தையை மிருகத்தனமாக தாக்கும் தாய் காரணம் என்ன தீயாய் பரவிய பகீர் வீடியோ

குழந்தையை மிருகத்தனமாக அடிக்க காரணம்:

உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஜப்ரேடாவில் உள்ள ரூர்க்கியில் வசித்து வரும் அந்த குழந்தையின் தாய்க்கு 3 மகன்கள் தனது கணவரை மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்கிறார்.

அவர் தனது மூன்று மகன்களுடன் ஜப்ரேதாவில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார் மற்றும் உள்ளூர் துணிக்கடையில் வேலை செய்கிறார். பொருளாதார நிலை மோசமாக இருப்பதால் தனது மூன்று மகன்களை வளர்ப்பதில் சிரமப்படும் இந்த பெண், தனது ஒரு மகனிடம் வீடியோ எடுக்க கூறி மற்றோரு மகனை கீழே தள்ளி கொடூர செயலில் ஈடுபடுகிறார்.

மேலும் இந்த வீடியோவை தனது கணவருக்கு அனுப்புவதால் தனது நிலையை அவர் அறியக்கூடும், மேலும் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது கணவரை பயமுறுத்துவதற்காக அவரின் பொறுப்பை உணர்ந்து குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுவார் என்ற எண்ணத்தில் தனது குழந்தையை அடிப்பது போல் நடித்து வீடியோவை தனது கணவருக்கு அனுப்பியுள்ளார்.

mother brutally beats her son 
mother brutally beats her son

அந்த வீடியோவை அவரது கணவர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ வைரலானதை தொடந்ர்து ஹரித்வார் போலீசார் விசாரணையில் இறங்கினர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-

அந்த வீடியோ கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பழமையானது என்று தெரிவித்தனர். ஒரு சமூக ஊடக பதிவில், வீடியோவில் உள்ள பெண், தனது 8 வயது மகனை தாக்கியதாகவும், உத்தரபிரதேசத்தில் வசிக்கும் தனது கணவரை பயமுறுத்துவதற்காக முழு விஷயத்தையும் அரங்கேற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர். தனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் வீட்டுச் செலவுகளுக்குப் பங்களிக்கவில்லை எனவும் அப்பெண் கூறியதாக போலிஸார் தெரிவித்தனர்.

குழந்தைகள் நலக் குழுவுக்கு (CWC) தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன் பிறகு அந்தப் பெண் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இன்று குழந்தைகள் நலக் குழு முன்பாக பெண் மற்றும் குழந்தையின் ‘முதல் கட்ட கவுன்சிலிங்’ நடந்தது. மேலும் அவருக்கு பல கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்

ஹரித்வார் போலீசார் செய்தி பார்க்க :-

CLICK HERE

mother brutally beats her son 

Related Articles

Back to top button