Pondicherry NewshealthPuducherry News

surgical equipment sewn in stomach பெண் வயிற்றுக்குள் மருத்துவ உபகரணம் ரூ. 7.20 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு

பெண் வயிற்றுக்குள் மருத்துவ உபகரணம் ரூ. 7.20 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு

புதுச்சேரி மாநிலம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி.  கடந்த 2009 ஆண்டு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக  சேர்க்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

surgical equipment sewn in stomach
surgical equipment sewn in stomach

அதன் பின்பு வீடு திரும்பிய  பிரபாவதிக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததுள்ளது . அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால் இந்த வலி  ஏற்பட காரணமாக இருக்கும்  என்று பொறுத்து கொண்டார்.

அனால் பிரபாவதிக்கு அதிக வலி ஏற்பட்டதால் கடந்த செப்டம்ர் 2010ம் ஆண்டு  மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். மருந்து, மாத்திரை கொடுத்த டாக்டர்கள், உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தினர்.

வலி குறையாததால் பிரபாவதி வேறு  தனியார் டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். அப்போது, குடல்வால் பிரச்னை இருக்ககூடும் என்று  சந்தேகிக்கப்பட்டது.

எனவே, புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கடந்த  நவம்பர் 2010 தில்  குடல் வால் நீக்க அறுவை சிகிச்சை செய்ய பிரபாவதியின் வயிற்று பகுதியை பார்த்த டாக்டர்கள்,அறுவை சிகிச்சைக்கு பயன் படுத்தப்படும் ’ஆர்ட்ரி பார்செப்ஸ்’ எனப்படும் மருத்துவ உபகரணம் உள்ளே இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பல நாட்களாக வயிற்றில் அந்த மருத்துவ  உபகரணம்  இருந்ததால் அதன் மீது கொழுப்பு மாதிரியான   திரவம் மூடி இருந்துள்ளது .

உடனே அங்கிருந்து அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபாவதி அன்றைய தினமே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆர்ட்ரி பார்செப்ஸ் எனப்படும்  மருத்துவ உபகரணம் மற்றும் குடல்வாவும் எடுக்கப்பட்டது. 

விசாரணையில் பிரசவத்திற்காக  சேர்க்கப்பட்டடு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கபடும் போது கவன குறைவாக மருத்துவ உபகரணம் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டது   தெரியவந்தது.

மேலும் பிரபாவதி 10 மாதங்களாக கடும் வயிற்று வலியுடன் போராடியதாகவும் மருத்துவர்களின் கவன குறைவால் தனக்கு ஏற்பட்ட சேவை குறைபாடுக்கு ரூபாய் 10 லட்சம்  நஷ்டஈடு கேட்டு தனியார் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,

தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், பிரபாவதிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த பொழுது கவனக்குறைவாக மருத்துவ உபகரணத்தை நோயாளியின் வயிற்றில் வைத்து தைத்ததால், பல்வேறு  உடல் உபாதைகளுக்கும் ஆளாகி உள்ளார். எனவே, பிரபாவதிக்கு ரூ. 7 லட்சம் நஷ்டஈடு மேலும் , வழக்கு செலவு  தொகையாக ரூ. 20,000 என மொத்தம் ரூ. 7,20,000 தீர்ப்பின் நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் வழங்கிட மருத்துவக் கல்லுாரி நிர்வாகதிர்க்கு கோர்ட்  உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நஷ்ட ஈட்டு தொகை கொடுக்க தவறும் பட்சத்தில்  9% ஆண்டு வட்டி மேற்படித்தொகை செலுத்தும் வரை கொடுக்க உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

click here

surgical equipment sewn in stomach

Related Articles

Back to top button