CINEMA

vanitha vijayakumar attacked நடிகை வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர் கொடூர தாக்குதல் முழு விவரம்

நடிகை வனிதா விஜயகுமார் மீது தாக்குதல்

vanitha vijayakumar attacked நடிகை வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர் கொடூர தாக்குதல் முழு விவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். தனது மகளுக்கு ஆதரவாக விஜயகுமார் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

Attack on Vanitha Vijay Kumar
Attack on Vanitha Vijay Kumar

இந்நிலையில் தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டதாக வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார் அதில் முகத்தில் காயமடைந்த புகைப்படத்தை வெளியிட்டு பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். யாரென்று கடவுளுக்கே தெரியும். பிக்பாஸ் 7 வது சீசன் விமர்சனத்தை முடித்து இரவு சாப்பிட்டுவிட்டு, எனது சகோதரி சவுமியா வீட்டில் நிறுத்தி இருந்த என்னுடைய காரை எடுக்க சென்றேன். அப்போது ரெட் கார்ட் கொடுக்குறீங்களா? அதுக்கு நீ ஆதரவா” என்று கூறி தாக்கினார்

எனது முகத்தில் ரத்தம் வழிந்தது. நள்ளிரவு 1 மணி என்பதால் யாரும் அங்கு இல்லை. என்னுடைய சகோதரியை நான் அழைத்தேன். அவர் காவல் நிலையத்தில் புகாரளிக்க என்னை அழைத்தார். ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டேன். மேலும் அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.

Vanitha Vijayakumar attacked by unknown person
Vanitha Vijayakumar attacked by unknown person

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டிலிருந்து ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button