CINEMA

vijayakanth news update விஜயகாந்த்துக்கு விரதம் இருந்து மாலை போட்ட தேமுதிக பக்தர்கள்.. நினைவிடத்தில் மாலையை கழட்ட முடிவு!

vijayakanth news update திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதியை சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் தொண்டர்கள் 11 பேர் இன்று குண்டாம்பட்டியில் விஜயகாந்தின் படத்தை வைத்து வழிபட்டு, மாலை அணிந்தனர். எரியோடு தே.மு.தி.க பேரூர் கழக செயலாளர் சங்கர் குரு சாமியாக முன்னின்று தொண்டர்களுக்கு மாலை அணிவித்தார்.

அதனைத்தொடர்ந்து 5 நாட்கள் விரதம் இருந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று பூ கலசங்களுடன் சென்னை கோயம்பேடு தே.மு.தி.க தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு யாத்திரை சென்று, வழிபாடு நடத்த உள்ளனர். மேலும் கேப்டனை வழிபாடு செய்ய “தர்ம தேவனே போற்றி! போற்றி!” என்ற தாரக மந்திரத்தை உருவாக்கியுள்ளார்கள்

vijayakanth news update
vijayakanth news update

அதேபோல் ஆண்டுதோறும் இதே போன்று மாலை அணிந்து விரதம் இருந்து நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கர் தெரிவித்துள்ளார் தமிழகத்திலேயே முதல் முறையாக அரசியல்வாதி ஒருவருக்கு கொண்டர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, பூ கலசம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

vijayakanth news update

CLICK HERE

Related Articles

Back to top button