IMPORTANT NEWSlifestyle

man cheated and married IPS officer ஐஆர்எஸ் அதிகாரி என்று பெண் IPS அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி

பெண் IPS அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி முழு விவரம்

man cheated and married IPS officer ஐஆர்எஸ் அதிகாரி என்று பெண் IPS அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி பெண் IPS அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி முழு விவரம்

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ரேஸ்தா தாக்குர் என்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரி இவர் காவல்துறையில் செய்த செயல்பாடுகளால் அங்கு உள்ளவர்கள் பெண் சிங்கம் என்று அழைத்து வந்தனர்.இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள திருமண இணையத்தளம் மூலம் வரன் தேட ஆரம்பித்தார்.

man cheated and married IPS officer
man cheated and married IPS officer

மேட்ரிமோனியல் தளத்தில் ரோஹித் ராஜ் என்பவர், தான் (IRS)இந்திய வருவாய் அதிகாரி என்றும், ராஞ்சியில் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

ரோஹிதின் ஜாதகம் ஒத்துப்போனதால் அவரை திருமணம் செய்ய ஸ்ரேஸ்தாவும் அவரின் குடும்பத்தாரும் முடிவு செய்தனர். ரோஹித் ராஜ் குறித்து ஸ்ரேஸ்தாவின் உறவினர்கள் விசாரித்ததில். ரோஹித் ராஜ் IRS அதிகாரி என்பதை உறுதி செய்தனர்.

இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் ரோஹித் ராஜ் உண்மையில் IRS அதிகாரி கிடையாது என்றும், பொய் சொல்லி திருமணம் செய்தது ஸ்ரேஸ்தாவிற்கு தெரிய வந்தது. இருந்தாலும் திருமணம் செய்து கொண்டதால் அவருடன் ஸ்ரேஸ்தா வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஸ்ரேஸ்தாவின் பெயரை சொல்லி ரோஹித் பல இடங்களில் பணம் வசூலிக்க ஆரம்பித்தார். இது குறித்து ரோஹித்திடம் ஸ்ரேஸ்தா பேசிப்பார்த்தார். ஆனால் பணம் வசூலிப்பதை ரோஹித் நிறுத்தவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் திருமணமான இரண்டு ஆண்டில் ரோஹித்தை ஸ்ரேஸ்தா விவாகரத்து செய்து விட்டார்.

ஸ்ரேஸ்தாவின் பிரச்னை அத்தோடு முடியவில்லை. தொடர்ந்து ஸ்ரேஸ்தாவின் பெயரை சொல்லி ரோஹித் பணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதையடுத்து ஸ்ரேஸ்தா காஜியாபாத் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரோஹித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு காரணமாக தான் தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

man cheated and married IPS officer

 

click here

Related Articles

Back to top button