INTERNATIONAL NEWS

icc ban sri lanka cricket team இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்

இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி அறிவிப்பு

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இலங்கை அணி 9 லீக் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் , 7 போட்டிகளில் தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் இலங்கை அணி வெளியேறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட்
இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட்

இதனை தொடர்ந்து உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வி காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் மொத்தமாக கலைக்கப்பட்டது. இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்கா தலைமையில் இடைக்கால குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றனர். இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளில் இலங்கை அரசின் தலையீடு உள்ளதால், இலங்கை கிரிக்கெட் வாரியம் தன்னாட்சியாக செயல்படவில்லை என்று கூறி ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை விரைவில் உறுதி செய்ய வேண்டும் என்றும், இலங்கை கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும ஐசிசி தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button