JOB

10th pass tamilnadu govt job 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் கிளர்க் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

tirupattur district job vacancy ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை வாய்ப்பு

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் கிளர்க் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பு பதிவறை எழுத்தர் நிலையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10th pass tamilnadu govt job
10th pass tamilnadu govt job

பதிவறை எழுத்தர் பணி:- அலுவலகத்திற்கு வரும் மற்றும் வெளிச்செல்லும் கடித போக்குவரத்து பராமரிப்பு பணி. முடிவுற்ற கோப்புகள், முடிவுற்ற பதிவேடுகள் பராமரித்தல்

இரவு காவலர் பணி:- பணியின் தன்மை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த அலுவலத்தில் பாதுகாப்பு பணி மற்றும் அலுவலக தூய்மை செய்தல் பணி.

ஓட்டுநர் பணி:– உயர் அலுவலர்கள் திட்ட பணிகளை ஆய்வு செய்ய வெளிசெல்லும் போது ஈப்பு ஓட்டும் பணி, அட்டவணையில் அரசு நிர்ணயம் செய்யும் பிற படிகளுடன்

அலுவலக உதவியாளர் பணி:-அலுவலக தலைவர். பிரிவு தலைவர். பணியாளர்களின் உடனிருத்தல், கோப்புகள் எடுத்து செல்லுதல் மற்றும் பிற அலுவலக பணிகள் செய்தல்

பணி:-

Office Assistant, Driver, Record Clerk, Night Watchman

விண்ணப்பிக்க கடைசி தேதி :-

31.10.2023

கல்வி தகுதி:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்:-

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

3. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

5. தகுதியில்லாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

6. காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு

8. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவஞ்சல் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), ஊரக வளர்ச்சி அலகு, மூன்றாவது தளம்(E-பிளாக்) மாவட்ட ஆட்சியரகம் திருப்பத்தூர்-635601 என்ற முகவரிக்கு 31.10.2023 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

நேரில் கொண்டு வரப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான https://www.tirupathur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/09/2023093062.pdf

Related Articles

Back to top button