NATIONAL NEWS

bangalore bmw car breaking window காரின் கண்ணாடியை உடைத்து 14 லட்சம் திருடிய மர்ம நபர்கள் வைரல் சிசிடிவி வீடியோ

Bengaluru BMW Car BMW காரின் கண்ணாடியை உடைத்து,14 லட்சம் திருட்டு

பெங்களூருவில் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த BMW காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த ₹14 லட்சம் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் – சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு!

bangalore bmw car breaking window
bangalore bmw car breaking window

பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த 13.75 லட்சம் ரூபாய் பணத்தை திருடிள்ளார்கள்

பெங்களூர் சர்ஜாபூர் சோம்புராவில் உள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகின்றது

தற்போது வைரல் ஆகும் வீடியோவில் ஒருவர் ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஒருவர் காத்திருக்கின்றார் மற்றொரு நபர் காரின் டிரைவரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடுகின்றார் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.பெங்களூரு ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்த பாபு என்பவர் தனக்கு சொந்தமான BMW X5 காரில் வெள்ளிகிழமை அன்று 1:30 மணியளவில் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கிரியாஸ் கடையின் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்

திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் காணாமல் போனது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து சர்ஜாபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ பார்க்க:-

Related Articles

Back to top button