NATIONAL NEWS

Vande Bharat வேகமாக வந்த வந்தேபாரத் ரயில் அலட்சியமாக தண்டவாளத்தை கடந்து நூலிழையில் உயிர்தப்பிய முதியவர் வைரல் வீடியோ

வந்தேபாரத் ரயில் அலட்சியமாக தண்டவாளத்தை நபர்

வந்தேபாரத் ரயில் வருவதை கவனித்தும் அலட்சியமாக தண்டவாளத்தை கடந்த நபர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள திரூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 5 மணியளவில் திரூர் ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரமில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. எதிர்புறம் இருந்தவர்கள் அந்த முதியவரை வர வேண்டாம் என்று பிளாட்பாரத்தில் நின்று கத்துகின்றார்கள்

வேகமாக வந்த வந்தேபாரத் ரயில்
வேகமாக வந்த வந்தேபாரத் ரயில்

ஆனால் அவர் அந்த கூக்குரலை அலட்சியபடுத்தி தண்டவாளத்தை கடக்கின்றார் ஆனால் அதற்குள் ரயில் அந்த முதியவர் அருகில் வந்துவிட்டது. தண்டாளத்தின் குறுக்கே வந்த நபரை கண்டதும் ரயில் ஓட்டுநர் ஹாரன் சத்தம் எழுப்பிஎச்சரிக்கை விடுத்தார். சரியாக ரயில் பிளாட்பாரத்திற்குள் வேகமாக கடக்கவும், முதியவர் பிளாட்பாரத்தில் கால் வைத்து ஏறி உள்ளே வரவும் ஒரு சில விநாடிகளே இருந்தது. அந்த முதியவர் தப்பித்து விடுகிறார்.

வைரல் வீடியோ பார்க்க:-

Related Articles

Back to top button