sports News

ISPL chennai team சென்னை அணியை வாங்கி கிரிக்கெட்டில் கால்பதித்த நடிகர் சூர்யா

ISPL T10 போடியில் கலந்து கொள்ள பதிவு செய்யுங்கள்

ISPL chennai team

இந்தியாவின் முதல் டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் மும்பையில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்:- இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடரின் குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ISPL T10 சென்னை அணியை வாங்கி கிரிக்கெட்டில் கால்பதித்த நடிகர் சூர்யா தமிழ் திரையுலக நடிகர் சூர்யா ஐ.எஸ்.பி.எல் என்கிற பெயரில் நடத்தப்படும் T10 தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன.

ISPL chennai team
ISPL chennai team

10 ஓவர்களை கொண்ட போட்டிகளாக இந்த ஐஎஸ்பிஎல் தொடர் நடத்தப்படும். இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.

போட்டியில் கலந்து கொள்ள :-

CLICK HERE

https://ispl-t10.com/registration-user

அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கியுள்ளார்கள். இதைத்தொடர்ந்து, ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.மேலும்  இந்த போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்யுமாறும் கேட்டுள்ளார்

ஐஎஸ்பிஎல் குறித்து ரவி சாஸ்திரி கூறியது:-

நான் மும்பை தெருக்களில் கிரிக்கெட் விளையாடி வளர்ந்தவன்.டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் உள்ள திறமைகளின் அளவு சிறப்பானது. அந்த திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிறைய பந்து வீச்சாளர்கள் டென்னிஸ் பால் கிரிக்கெட் மூலம் வந்துள்ளனர்,”டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் வீரர்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும் என்று சாஸ்திரி கூறினார். “குறைந்த பட்சம் அவர்கள் (வீரர்கள்) நல்ல வேலைகளைப் பெறுவார்கள் மற்றும் பொருளாதார ரீதியாக அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள், மேலும் இந்த டென்னிஸ் பந்து வீரர்கள் நாடு முழுவதும் பிரபலமாக இருப்பதால் இந்த வாய்ப்பைப் பெற வேண்டும்,சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் இன் தலைமை வழிகாட்டியாக இருக்கும் ரவி சாஸ்திரி மேலும் கூறினார்.

ISPL tennis ball cricket league
ISPL tennis ball cricket league

ஐஎஸ்பிஎல் அணிகள்:-

இத்தொடரில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கவுள்ளன மும்பை (மகாராஷ்டிரா), ஹைதராபாத் (ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா), பெங்களூரு (கர்நாடகா), சென்னை (தமிழ்நாடு), கொல்கத்தா (மேற்கு வங்கம்), ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு அணிகள் பங்கேற்கும்.

ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடி ரூபாய் ஏலத் தொகையாக வழங்கப்படும். வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Street Premier League
Indian Street Premier League

ISPL tennis ball cricket league:-

more Details

Related Articles

Back to top button