TamilNadu NewsCINEMA

bhavatharini died News சொந்த ஊரான பண்ணைப்புரத்தில் பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது

bhavatharini died News சொந்த ஊரான பண்ணைப்புரத்தில் பவதாரிணி உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது

bhavatharini died
bhavatharini died

இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பவதாரிணி உடலுக்கு இன்று இறுதிசடங்குகள் நடைப்பெற உள்ளது. முன்னதாக நேற்றிரவு 10 மணிக்கு மேல், பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர், சென்னையில் இருந்து தேனி கொண்டு செல்லப்பட்டது. பிரபல பிண்ணனி பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 47. இலங்கையில் இருந்து அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

அதன் பின்பு தி நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்றிரவு 10 மணிக்கு பிறகு பவதாரணியின் உடல் இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரம் கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது உறவினர்கள், பண்ணைபுரம் மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

bhavatharini died News

Related Articles

Back to top button