TamilNadu News

died mayiladuthurai after drinking poisoned நிஜத்தில் ஒரு சூனா பானா சம்பவம் வடிவேலு பாணியில் நண்பரின் மதுவை பிடுங்கி குடித்த இளைஞர் இறந்தார் – சாக நினைத்தவர் உயிர் தப்பினார் நடந்தது என்ன முழு விவரம்

died mayiladuthurai after drinking poisoned

died mayiladuthurai after drinking poisoned
died mayiladuthurai after drinking poisoned

died mayiladuthurai after drinking poisoned நிஜத்தில் ஒரு சூனா பானா சம்பவம் வடிவேலு பாணியில் நண்பரின் மதுவை பிடுங்கி குடித்த இளைஞர் இறந்தார் – சாக நினைத்தவர் உயிர் தப்பினார் நடந்தது என்ன முழு விவரம்

மயிலாடுதுறை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக மதுவில் விஷம் கலந்து வைத்திருந்த நபரின் மதுவை நண்பர் வாங்கி குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பிள்ளாவிடத்தை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் மகன் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர்.

மன உளைச்சலில் இருந்த ஜோதிபாசு நேற்று மதியம் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு பாதி வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது நண்பரான ஜெரால்டு (24) பூச்சி மருந்து கலந்து இருப்பதை அறியாமல் ஜோதிபாசுவிடம் மதுபானத்தை வாங்கி குடித்துள்ளார். மதுவில் விஷம் கலந்திருப்பதாக ஜோதிபாசு எச்சரித்துள்ளார். ஆனால், ஏற்கனவே மது அருந்தி போதையில் இருந்த ஜெரால்டு நண்பரின் பேச்சைக் கேட்காமல் மது குடித்துள்ளார்.

நீண்ட நேரமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஜோதிபாசு மருந்து கலந்து குடித்த மதுபானத்தை வாந்தி எடுத்துள்ளார்.ஆனால் ஜெரால்டு நண்பர் ஜெரால்டுவுடன் மதுபோதையில் உளறிய படி நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் ஜோதிபாசு மருந்து கலந்து குடித்த மதுபானத்தை வாந்தி எடுத்துவிட்டார். ஆனால் ஜெரால்டுக்கு வாந்தி வரவில்லை.. இதனிடையே போதை ஓரளவு தெளிந்த பின்னர், ஜெரால்டு வீட்டிற்கு ஜோதிபாசு தகவல் கொடுத்துள்ளார்கள்.

அங்கு வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ஜெரால்டு உயிரிழந்துள்ளார்.

ஜோதிபாசுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெரம்பூர் காவல்துறையினர் ஜெரால்டுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர். முன்விரோதம் காரணமாக ஜோதிபாசு கொலை செய்யும் நோக்கில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து ஜெரால்டிற்கு கொடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடிவேல் படத்தில் வரும் சூனா பானா காமெடி காட்சி தற்போது நிஜத்தில் அறங்கேறி இளைஞரின் உயிர் பரிதாபமாக பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

died mayiladuthurai after drinking poisoned

Related Articles

Back to top button