TamilNadu News

local holiday villupuram நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

local holiday villupuram நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தமிழகத்தில் நாளை மார்ச் 14ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை
உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு மாசிப்பெருவிழா மார்ச் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் தேதி மயானக்கொள்ளை விழாவும், மார்ச் 12ம் தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது.விழுப்புரம்இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நாளை மார்ச் 14ம் தேதி வியாழக்கிழமை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்ச் 14 திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது” அதே நேரத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலம் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 23ம் தேதி பணிநாளாக செயல்படும் ” என அறிவித்துள்ளார்.

local holiday villupuram

More Details

Related Articles

Back to top button