TamilNadu News

prime minister scholarship scheme 2023 பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம்

PM Scholarship Scheme 2023 9 ,10,11 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் விண்ணப்பிப்பது எப்படி

prime minister scholarship scheme 2023 பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த 9-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

prime minister scholarship scheme 2023
prime minister scholarship scheme

நாடு முழுவதும், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தோவு முகமையால் கடந்த செப்டம்பரில் 29-ஆம் தேதி நடத்தப்படவிருந்த நுழைவுத் தோவில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோவு செய்யப்படுபவா் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தோவு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவா்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் எனவும், மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே , இந்த ஆண்டுக்கான பயனாளிகள் தோவு செய்யப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31.12.2023

prime minister scholarship scheme 2023

மேலும் விவரங்களுக்கு:-

CLICK HERE

Related Articles

Back to top button