viral videos

doctor was assaulted in Gujarat எமர்ஜென்ஸி அறைக்கு வெளியே செருப்பை விட்டு வருமாறு கூறிய டாக்டர் தாக்கப்பட்ட  சம்பவம் வைரல் வீடியோ

எமர்ஜென்ஸி அறைக்கு வெளியே செருப்பை விட்டு வருமாறு கூறிய டாக்டர் தாக்கப்பட்ட  சம்பவம் வைரல் வீடியோ

எமர்ஜென்ஸி வார்டில்  நோயாளியைப் பார்க்க வந்த குடும்ப உறுப்பினர் ஒருவர் செருப்புடன் நுழைந்ததைக் பார்த்து , வெளியே செருப்பை விட்டு வருமாறு கூறிய மருத்துவரை தாக்கும் வீடியோ வைரலானது.

doctor was assaulted in Gujarat
doctor was assaulted in Gujarat

குஜராத்தில் பாவ்நகரில் உள்ள ஸ்ரேயா என்ற தனியார் மருத்துவமனையில் , கடந்த  12ம் தேதியன்று தலையில் காயமடைந்த ஒரு பெண்னை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர் .

அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்த அந்த பெண் நோயாளியை பார்க்க வந்த குடும்பத்தினரை , வெளியே  காலணிகளைக் கழற்றிவிட்டு வருமாறு மருத்துவர் ஜெய்தீப் சிங் கோஹில் (33) கூறியுள்ளார்.

உடனே அந்த  நோயாளியைப் பார்க்க வந்த நபர் மருத்துவர் மற்றும் மருத்துவமனை  ஊழியர் இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மருத்துவர்  பலத்த  காயம் அடைந்தார் 

மேலும்  எமர்ஜென்ஸி அறையில் இருந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.

மருத்துவர் மற்றும் மருத்துவமனை  ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவு அறையில் உள்ள  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதை தொடர்ந்து மருத்துவரை தாக்கிய முன்றுபெர் மீது போலீஸார் FIR பதிவு செய்து கைது செய்தனர் .

எமர்ஜென்ஸி அறைக்கு வெளியே செருப்பை விட்டு வருமாறு கூறிய டாக்டர் தாக்கப்பட்ட   வீடியோ தற்போது வைரலாகி வருகிறது 

வீடியோ பார்க்க:

CLICK HERE

doctor was assaulted in Gujarat

Related Articles

Back to top button